Saturday 27th of April 2024 04:20:39 PM GMT

LANGUAGE - TAMIL
.
கேரளாவில் 2வது முறையாக ஆட்சியமைக்கிறார் பினராயி விஜயன்!

கேரளாவில் 2வது முறையாக ஆட்சியமைக்கிறார் பினராயி விஜயன்!


இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 2வது முறையாக ஆட்சியமைக்கிறார் பினராயி விஜயன்.

இந்தியாவின் கேரளா மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பான்மைக்கு மேலதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வரும் கம்யூனிஸ்ட்டுகள் 2வது முறையாக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கேரள அரசவைக்கான தேர்தலில் 71 இடங்களை பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், இதுவரை 139 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.

இம்முடிவுகளின் அடிப்படையில் இதுவரை 95 இடங்களில் கம்யூனிட்ஸ்ட்டுகள் முன்னிலை பெற்றுள்ளன.

காங்கிரஸ் 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

சவாலான நிலையில் பெற்றுக் கொண்ட இந்த வெற்றிக்கு காரணமாக வாக்களித்த மக்களுக்கு, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சற்று முன்னதாக ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது நன்றியைத் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா, கேரளா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE